குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

இளம் வீரர்களுக்கு தன்னம்பிக்கையளிப்பவர் விராட் கோலி: ஆப்கன் வீரர் புகழாரம்!

ஆப்கானிஸ்தான் இளம் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஜ் இந்திய வீரர் விராட் கோலி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். 

Published On :2 பிப்ரவரி 2024, 8:39 am IST

கடந்த அக்.5ஆம் தேதி முதல்  உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 13வது போட்டியாக இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் விளையாடியது. 

சாம்பியன் அணியான இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை குர்பாஜ் துவம்சம் செய்தார். 57 பந்துகளில் 80 ரன்கள் அடித்து ரன் அவுட்டானார். இதில் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும். 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. 

ரஹ்மானுல்லா குர்பாஜ், “விராட் கோலி உலகத்திலுள்ள அனைத்து இளம் வீரர்களுக்கும் உத்வேகம் அளிக்கக் கூடியவர். கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலியை பார்த்து அதிகம் கற்றுக் கொள்ளலாம். எப்படி ஒரு இன்னிங்ஸை தொடங்கி முடிக்க வேண்டும், எப்படி அதிகமான ரன்கள் குவிக்க முடியும் என்பதையும் விளையாட்டு குறித்து சரியான திட்டமிடலையும் அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். 

34 வயதான விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 13,239 ரன்கள் குவித்துள்ளார். இதில் 47 சதங்கள், 68 அரைசதங்களும் அடங்கும். 

ஆப்கனை சேர்ந்த 21 வயதான ரஹ்மானுல்லா குர்பாஜ் 29 போட்டிகளில் 1,106 ரன்கள் எடுத்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.