தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

24 வயதில் ஓய்வை அறிவித்த நவீன் உல் ஹக்!

உலகக் கோப்பையுடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் அறிவித்துள்ளார்.

News image

நவீன் உல் ஹக்

Updated On :28 செப்டம்பர் 2023, 9:44 am IST

உலகக் கோப்பையுடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் அறிவித்துள்ளார்.

ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணியில் நவீன் உல் ஹக் இடம்பெற்றுள்ளார். 24 வயதாகும் நவீன், ஆப்கன் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக உள்ளார்.

ஆப்கன் அணிக்காக கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் நவீன், இதுவரை 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடு 14 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இருப்பினும், கடந்த 2021-ஆம் ஆண்டுமுதல் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெறாமல் இருந்தார். சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை தொடரிலும் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், உலகக் கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாகவும், தொடர்ந்து டி20 போட்டிகளில் விளையாடுவேன் என்றும் இன்ஸ்டாகிராமில் நவீன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல், பிபிஎல் போன்ற தொடர்களில் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வரும் நவீன், கடந்தாண்டு ஐபிஎல் போட்டியின் போது இந்திய வீரர் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.