டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரராக இருப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் 14 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2 அரைசதங்கள் அடித்துள்ளார்.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரராக இருப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக நான் ரிஷப் பந்த்தை தேர்வு செய்வேன். ஏனென்றால், அவர் அப்படியே பழைய ஃபார்மில் இருக்கிறார். கார் விபத்து ரிஷப் பந்த்தின் ஆட்டத்தில் எந்த ஒரு இடையூறையும் ஏற்படுத்தியதாக எனக்குத் தெரியவில்லை. அவர் சிறப்பாக விளையாடுகிறார். இடது கை ஆட்டக்காரராக இருப்பதால், நடுவரிசை ஆட்டக்காரராக ரிஷப் பந்த் அணிக்கு பலம் சேர்ப்பார் என்றார்.
இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்துக்கு சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் ஜித்தேஷ் சர்மா இடையே கடும் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.