எம்எல்ஏக்கள் ராஜிநாமா! சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு அதிமுக எம்பி கோரிக்கை! தில்லியிலிருந்து புறப்பட்டார் முதல்வர் விஜய்! காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவில்லை! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! 11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெறுமா?

வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News image

படம் | வங்கதேச கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :6 ஆகஸ்ட் 2024, 10:07 pm IST

வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வங்கதேசத்தில் வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது. வன்முறை அதிகரித்ததால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்து, நாட்டை விட்டு வெளியேறினார். இதனையடுத்து, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்த நிலையில், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. வங்கதேசத்தில் தற்போது ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில், முன்கூட்டியே வங்கதேச வீரர்கள் பாகிஸ்தானுக்கு வந்தாலும் அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இந்த கோரிக்கைக்கு வங்கதேசம் தரப்பில் இதுவரை எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.