பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

கடைசி ஒருநாள் போட்டி இந்திய அணிக்கான மிகப் பெரிய வாய்ப்பு; வாஷிங்டன் சுந்தர் கூறுவதென்ன?

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு என இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.

News image

படம் | AP

Updated On :6 ஆகஸ்ட் 2024, 8:31 pm IST

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு என இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (ஆகஸ்ட் 7) நடைபெறவுள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடரை சமன்செய்ய கடைசிப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி, சுழற்பந்துவீச்சு சவாலை சமாளித்து சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக இந்திய அணியை தயார் நிலையில் வைத்திருக்க கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு என வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி, கடினமான சூழல்களில் சிறப்பாக செயல்பட இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு. மிகப் பெரிய தொடர்கள் வரவிருக்கின்றன. அந்த தொடர்களிலும் இதுபோன்ற கடினமான சூழல்கள் இருக்கும். எதிர்வரும் மிகப் பெரிய தொடர்களில் கடினமான சூழல்களில் சுழற்பந்துவீச்சு மேலும் சவாலனதாக இருக்கும். இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணி சந்தித்த சவாலான சூழலை பாடமாக எடுத்துக் கொண்டு, நாளை நடைபெறவுள்ள போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும்.

சுழற்பந்துவீச்சுக்கு எதிராக இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இதுபோன்ற ஆடுகளங்களில் நாங்கள் ஏற்கனவே விளையாடியுள்ளோம். உள்ளூர் போட்டிகளிலும் இதுபோன்ற சவாலான ஆடுகளங்களில் நன்றாக விளையாடியுள்ளோம். ஆடுகளம் சவாலனதாக இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்த சவாலை இந்திய அணி வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.