இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

முதல் முறையாக உலக மகளிர் கபடி தொடர்!

கபடியை பிரபலப்படுத்தும் விதமாக உலக மகளிர் கபடி தொடர் முதல் முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ளது.

கோப்புப் படம்

Published On :11 ஆகஸ்ட் 2024, 8:26 pm IST

கபடியை பிரபலப்படுத்தும் விதமாக உலக மகளிர் கபடி தொடர் முதல் முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ளது.

உலக மகளிர் கபடி தொடர் அடுத்த மாதம் இந்தியாவில் நடத்தப்படவுள்ளது. கபடிக்காக உலக அளவில் ஒரு தொடர் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த கபடி தொடரில் உலகின் 15 நாடுகளிலிருந்தும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடவுள்ளனர்.

உலக அரங்கில் கபடியை பிரபலப்படுத்துவதுடன் ஒலிம்பிக் போட்டிகளில் கபடியை சேர்க்கும் நோக்கத்துடனும் இந்த தொடர் நடத்தப்பட உள்ளது. மேலும், 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது. 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்தும் பட்சத்தில், ஒலிம்பிக்கில் கபடியை சேர்ப்பது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் முறையிடுவதற்கு இந்த உலக மகளிர் கபடி தொடர் உதவியாக இருக்கும்.

உலக மகளிர் கபடி தொடர் ஹரியாணாவில் நடத்தப்படவுள்ளது. உலக கபடி அமைப்பு மற்றும் ஹரியாணா அரசு இணைந்து இந்த கபடி தொடரை நடத்த திட்டமிட்டுள்ளன. இங்கிலாந்து, போலாந்து, ஆர்ஜென்டீனா, கனடா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இந்த கபடி தொடரில் பங்கேற்ப விருப்பம் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.