சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட்; முன்னாள் ஆஸி. கேப்டன் உற்சாகம்!

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது உற்சாகமளிப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

News image

ரிக்கி பாண்டிங் - படம் | ஐசிசி

Updated On :11 ஆகஸ்ட் 2024, 6:20 pm IST

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது உற்சாகமளிப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் முதலும் கடைசியுமாக கிரிக்கெட் போட்டி 1900 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்தப் போட்டியில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. பிரிட்டன் அணி வெற்றி பெற்றது. அதன்பின், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவில்லை. இந்த நிலையில், 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் நடத்தப்படும் என ஒலிம்பிக் குழு தரப்பில் கடந்த ஆண்டு அக்டோபரில் தெரிவிக்கப்பட்டது.

2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பேஸ்பால்-சாஃப்ட்பால், ஃபிளாக் ஃபுட்பால், லாக்ரோஸ் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளுடன் கிரிக்கெட்டும் நடத்தப்படும் என மும்பையில் நடைபெற்ற 141-வது சர்வதேச ஒலிம்பிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது உற்சாகமளிப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் பேசியதாவது: ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது நேர்மறையான விஷயமாக இருக்கிறது. கடந்த 15-20 ஆண்டுகளாக கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்ப்பது தொடர்பான குழுக்களின் ஆலோசனையில் பங்கேற்றுள்ளேன். எவ்வாறு ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட்டை கொண்டு வரலாம் என்பது குறித்து ஆலோசித்துள்ளோம். இறுதியாக, தற்போது கிரிக்கெட் மீண்டும் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளை உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள் கண்டுகளிக்கின்றனர். உலகம் முழுவதும் அதிக பார்வையாளர்களைக் கொண்டுள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மிக முக்கியமான விஷயமாகும். 6 அல்லது 7 அணிகள் மட்டுமே ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என நினைக்கிறேன். ஒலிம்பிக் போட்டிகளுக்கு எதன் அடிப்படையில் அணிகள் தேர்வு செய்யப்படப் போகின்றன என்பது கவனம் பெற்றுள்ளது. ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட் விளையாடப்பட உள்ளது மிகுந்த உற்சாகமளிக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.