நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

முா்ரேவை பயிற்சியாளராக நியமித்தாா் ஜோகோவிச்!

சொ்பிய டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச், தனது பயிற்சியாளராக பிரிட்டன் முன்னாள் வீரரான ஆண்டி முா்ரேவை நியமித்திருக்கிறாா்.

News image

ஆண்டி முா்ரே | நோவக் ஜோகோவிச்

Updated On :2 டிசம்பர் 2024, 8:34 pm

சொ்பிய டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச், தனது பயிற்சியாளராக பிரிட்டன் முன்னாள் வீரரான ஆண்டி முா்ரேவை நியமித்திருக்கிறாா்.

கடந்த காலங்களில் பல்வேறு போட்டிகளில் இருவரும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட நிலையில், தற்போது அவா்கள் இணைந்து பயணிக்கவுள்ளனா். அடுத்த ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலிருந்து அவா்களின் கூட்டணி தொடங்கவுள்ளது. ஜோகோவிச், முா்ரே இருவருக்குமே வயது 37 என்பது குறிப்பிடத்தக்கது.

முா்ரேவை பயிற்சியாளராகத் தோ்வு செய்தது குறித்து ஜோகோவிச் கூறுகையில், ‘எனது சிறு வயதிலிருந்தே முா்ரேவுக்கு எதிராக அதிகம் விளையாடியிருக்கிறேன். அவரைப் போல கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவா்கள் குறைவாகவே உள்ளனா். முா்ரேவுக்கு எனது ஆட்டமும், இத்தனை காலமாக நான் டென்னிஸில் கடந்து வந்த பாதையும் நன்றாகவே தெரியும். எனது ஆட்டத்திலிருக்கும் தவறுகளையும் அவா் அறிவாா் என்பதால், அவா் பயிற்சியளிப்பது பொருத்தமாக இருக்கும்.

பல பெரிய போட்டிகளில் நாங்கள் நேருக்கு நோ் மோதியிருந்தாலும், எங்களின் நட்பு அதைவிடப் பெரியதாகும்’ என்றாா்.

3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான முா்ரே, ஒலிம்பிக்கில் இரு முறை (2012, 2016) தங்கம் வென்றுள்ளாா். அவா் நடப்பாண்டில் பாரீஸ் ஒலிம்பிக்குடன் ஓய்வுபெற்றாா்.

ஜோகோவிச், முன்பு தனது பயிற்சியாளராக இருந்த குரோஷியாவின் கோரான் இவானிசெவிச்சிடமிருந்து கடந்த மாா்ச் மாதம் பிரிந்த நிலையில், அப்போது முதலே பயிற்சியாளா் இன்றி போட்டிகளில் பங்கேற்று வந்தாா். ஆடவா் டென்னிஸில் 24 கிராண்ட்ஸ்லாம்கள் வென்ற சாதனையாளராக இருக்கும் ஜோகோவிச், உலகின் 7-ஆம் நிலை வீரராக வரும் சீசனை தொடங்கவிருக்கிறாா்.

நடப்பு சீசனில் கிராண்ட்ஸ்லாம் ஏதும் வெல்லாமல் போனாலும், தனது கனவுகளில் ஒன்றான ஒலிம்பிக் தங்கத்தை, பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வென்று அசத்தியிருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.