பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால்: திண்டுக்கல்லில் தொடக்கம்

43-ஆவது தேசிய அளவிலான ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் போட்டி திண்டுக்கல்லில் திங்கள்கிழமை தொடங்கியது.

Published On :

43-ஆவது தேசிய அளவிலான ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் போட்டி திண்டுக்கல்லில் திங்கள்கிழமை தொடங்கியது.

திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி வளாகத்தில் வருகிற 27ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், தமிழ்நாடு, ஆந்திரம், பஞ்சாப், பிகார், திரிபுரா உள்ளிட்ட 25 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. போட்டி தொடக்க நிகழ்வுக்கு இந்திய ஹேண்ட்பால் சம்மேளனத்தின் பொதுச் செயலர் பிரிட்பால் சிங் சலுஜா தலைமை வகித்தார். ஜிடிஎன் கல்லூரித் தாளாளர் க.ரத்தினம் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் மாவட்ட கால் பந்துக் கழக நிர்வாகிகள் கோ. சுந்தரராஜன், எஸ். சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதில் பங்கேற்றுள்ள 25 அணிகளும் 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடைபெறுகின்றன.

லீக் சுற்று நிறைவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பெறும் அணி நாக் அவுட் சுற்றுக்கு தேர்வு செய்யப்படும். புதுச்சேரி அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு அணியினர் 17-2 என்ற கோல் கணக்கில் எளிதாக வென்றனர்.

மற்றொரு ஆட்டத்தில் ஹிமாசல பிரதேச அணியினர் 28-1 என்ற கோல் கணக்கில் மேற்கு வங்க அணியை தோற்கடித்தனர். ஹரியாணா அணியினர் 14-0 என்ற கோல் கணக்கில் உத்தர கண்ட் அணியினரை வென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.