இந்தியாவுக்கு எதிரான தொடரில் 1-1 என சமநிலையில் இருக்கிறது இங்கிலாந்து அணி. பென் ஸ்டோக்ஸ் மெக்குல்லம் அணியினர் பேஸ்பால் என்ற தாக்கத்தை உலக கிரிக்கெட்டில் பேசு பொருளாக மாற்றியுள்ளார்கள்.
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ஜோ ரூட்-இன் பேஸ்பால் பாணியை விமர்சித்து பேசியுள்ளார். ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது:
இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவை பழித்தீர்க்குமா இந்தியா?
முதல் பந்திலிருந்தே 5ஆவது கியரில் விளையாடுகிறார்கள். சிலர் அப்படி விளையாடுவது எனக்கு பிரச்னையில்லை. அதேமாதிரி விளையாடுவது சரியில்லை. ஜோ ரூட் இதை மறக்க வேண்டும். ஜோ ரூட் அவரது பாணியிலேயே விளையாடி 10,000 ரன்கள் அடித்திருக்கிறார். அவருக்கு பேஸ்பால் ஆட்டம் தேவையில்லை.
இங்கிலாந்து அணியின் நிர்வாகத்தில் யாராவது ஒருவர் ஜோ ரூட்டிடம் ‘தயவுசெய்து உங்களது இயல்பிலேயே விளையாடுங்கள்’ எனக் கூற வேண்டும். ஸ்பின்னர்களை சிறப்பாக ஆடும் ஜோ ரூட் இப்படி மோசமாக ஆடுவதை பார்க்க வேதனையாக இருக்கிறது. ஸ்பின்னருக்கு எதிராக இங்கிலாந்து உருவாக்கிய சிறந்த பேட்டர்களில் ஒருவர் ரூட் என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.