தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ரஞ்சிக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய மும்பை!

ரஞ்சிக் கோப்பையில் மும்பை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

News image
Updated On :27 பிப்ரவரி 2024, 1:04 pm

DIN

முதன் இன்னிங்ஸ் ரன்கள் முன்னிலை அடிப்படையில் மும்பை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

ரஞ்சிக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் மும்பை மற்றும் பரோடா அணிகள் விளையாடி வந்த நிலையில், போட்டி இன்று முடிவுக்கு வந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது. இருப்பினும், முதல் இன்னிங்ஸ் ரன்கள் முன்னிலை அடிப்படையில் மும்பை அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே மத்திய பிரதேசம், தமிழ்நாடு மற்றும் விதர்பா அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில் தற்போது ரன்கள் முன்னிலை அடிப்படையில் மும்பை அணியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

மும்பை அணி இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணியை எதிர்கொள்கிறது. முதல் அரையிறுதிப் போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா அணிகள் மோதுகின்றன.

காலிறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மும்பை மற்றும் பரோடா அணிகள் முறையே 384 ரன்கள் மற்றும் 348 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.