நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்: ஆப்கானிஸ்தான் 26 ரன்கள் முன்னிலை!

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் 26 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

News image
Updated On :29 பிப்ரவரி 2024, 8:22 pm IST

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 26 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று (பிப்ரவரி 28) அபுதாபியில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது. அந்த அணி 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் ஸத்ரன் 53 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து தரப்பில் மார்க் அடாய்ர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

அயர்லாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டிர்லிங் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஸியா உர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி 53 ரன்களுடனும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்தைக் காட்டிலும் 26 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.