இந்திய மகளிரணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ததையடுத்து, இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது.
இதையும் படிக்க: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் முகமது ஷமி!
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளதால் இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.