தென்னாப்பிரிக்க டி20 லீக் தனக்கு தலைமைப்பண்பு குறித்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாக தென்னாப்பிரிக்க அணியின் அய்டன் மார்கரம் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க டி20 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை மார்கம் கேப்டனாக வழிநடத்துகிறார். அவரது தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரின் அறிமுக சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்க டி20 லீக் தனக்கு தலைமைப்பண்பு குறித்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாக தென்னாப்பிரிக்க அணியின் அய்டன் மார்கரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரன்கள் குவிப்பது என்பது எப்போதும் சிறப்பானது. டி20 லீக் என்பது கண்டிப்பாக வித்தியாசமானது. உங்களுக்கு டி20 போட்டிகள் நம்பிக்கையை அளிக்கும். அணியை கேப்டனாக வழிநடத்துவது என்பது மிகவும் பெருமையான விஷயம். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக அணியை வழிநத்துவது எனக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரம். சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் கேப்டனாக நான் தலைமைப்பண்பு குறித்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றார்.
நாளை (ஜனவரி 10) முதல் தென்னாப்பிரிக்க டி20 லீக் போட்டிகள் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.