நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முதல் டி20: இந்தியா பந்துவீச்சு; அணியில் முக்கிய வீரர்கள் இல்லை!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 

News image
Updated On :11 ஜனவரி 2024, 1:20 pm

DIN

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20  போட்டி மொஹாலியில் இன்று (ஜனவரி 11) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்கிறது. 

இந்திய அணியில் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி இன்றையப் போட்டியில் விளையாடவில்லை. அதேபோல சஞ்சு சாம்சன், ஆவேஷ்  கான் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பெறவில்லை. ஆப்கானிஸ்தான் அணியில் நூர் அகமது, ஷாராஃபுதீன் மற்றும் சலீம் சைஃபீ இன்றையப் போட்டியில் விளையாடவில்லை.

டி20 உலகக் கோப்பை நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளதால் இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.