இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வேகமாக நெருங்கி வருகிறார் அஸ்வின். டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைக்க அஸ்வினுக்கு இன்னும் 7 விக்கெட்டுகளே தேவைப்படுகின்றன.