இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம்... காரணம் என்ன?
அட்லாண்டிக் பெருங்கடலில் மையம் கொண்டுள்ள சூறாவளியால் பயணம் பாதிப்பு.


டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அட்லாண்டிக் கடலில் மையம் கொண்டுள்ள 4-ம் பிரிவு சூறாவளியால் மணிக்கு 210 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி தங்கியுள்ள பார்படாஸ் நகரில் இருந்து 570 கி.மீ. தொலைவில் சூறாவளி மையம் கொண்டுள்ளதால், பிரிஜ்டவுன் விமான நிலையத்தில் இன்று விமான சேவைகளை நிறுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், இந்திய வீரர்கள் பயணம் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.
பிரிஜ்டவுன் விமான நிலையத்தில் இருந்து நியூ யார்க் வந்து அங்கிருந்து எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் துபை வழியாக தில்லி வருவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், சூறாவளி காரணமாக இந்திய வீரர்களின் பயணத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அவர்கள் தனி விமானம் மூலம் நேரடியாக தில்லி அழைத்து வர திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தில்லி வரும் இந்திய வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெறவுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளின் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர், பயிற்சியாளர்கள் என 70 பேர் பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...