நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியை வழிநடத்தப் போவது யார்?

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது.

News image

படம் | பிசிசிஐ

Updated On :12 ஜூலை 2024, 4:17 pm IST

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் தொடங்குகிறது. முதல் டி20 போட்டி வருகிற ஜூலை 26 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, ஜூலை 27-ல் இரண்டாவது டி20 போட்டியும், ஜூலை 29-ல் மூன்றாவது டி20 போட்டியும் நடைபெறுகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டிகள் ஆகஸ்ட் 1,4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.

இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார். அதேபோல இலங்கை அணியும் அந்த அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளரான சனத் ஜெயசூர்யா தலைமையில் களமிறங்குகிறது.

இலங்கைக்கு எதிரான இந்த இருதரப்பு தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த தொடரில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை ஹார்திக் பாண்டியாவும், ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலும் வழிநடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.