11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ.8.5 கோடி பிசிசிஐ நிதியுதவி!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ. 8.5 கோடி நிதியுதவி அளிப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

News image

படம் | டீம் இந்தியா (எக்ஸ்)

Updated On :21 ஜூலை 2024, 9:55 pm IST

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ. 8.5 கோடி நிதியுதவி அளிப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 முதல் தொடங்கவுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த 117 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர். வீரர், வீராங்கனைகளுடன் பயிற்சியாளர்கள், உதவிப் பணியாளர்கள் என 140 பேரும் பாரிஸுக்குச் சென்றடைந்தனர். இந்தியா சார்பில் மொத்தமாக 257 பேர் கொண்ட குழு பாரிஸ் புறப்பட்டுச் சென்றது.

இந்த நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ. 8.5 கோடியை நிதியுதவியாக பிசிசிஐ அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு நிதியுதவி அளித்து பிசிசிஐ அவர்களுக்கு ஆதரவாக இருப்பதை இங்கு பெருமையுடன் அறிவித்துக் கொள்கிறேன்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு நாங்கள் ரூ. 8.5 கோடி வழங்குகிறோம். பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவுக்கு பெருமை சேருங்கள். ஜெய்ஹிந்த் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.