பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய ஆடவர் அணி
பாரிஸ்ஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய ஆடவர் அணி காலிறுதிக்கு முன்னேறியது.
பாரிஸ் ஒலிம்பிக் 2024ல் இந்திய ஆண்கள் வில்வித்தை அணி காலிறுதிச் சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்றது.
12 அணிகள் கலந்துகொண்ட இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய ஆடவர் அணி 2013 புள்ளிகளைப் பெற்றது.
இந்திய வில்வீரர்கள் பொம்மதேவரா தீரஜ், தருண்தீப் ராய் மற்றும் பிரவின் ஜாதவ் ஆகியோர் தரவரிசைப் போட்டிகளில் தனிநபர் சுற்றில் போட்டியிட்டு இந்தியாவிற்காக மொத்தம் 2013 புள்ளிகளை சேகரித்தனர்.
தீரஜ் 681 புள்ளிகளுடன் முதலிடமும் மற்றும் தனிநபர் தரவரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.
தகுதிச் சுற்றில் 3 ஆம் இடம்பிடித்த இந்திய அணியில் பொம்மதேவரா தீரஜ், தருண்தீப் ராய், பிரவின் ஜாதவ் ஆகியோர் 2013 புள்ளிகள் பெற்றனர்.
ஆண்கள் வில்வித்தை அணி தரவரிசை
தென் கொரியா - 2049 புள்ளிகள்
பிரான்ஸ் - 2025 புள்ளிகள்
இந்தியா - 2013 புள்ளிகள்
சீனா - 1998 புள்ளிகள்
தனிநபர் வில்வித்தை வீரர் தரவரிசை
பொம்மதேவரா தீரஜ் (681 புள்ளிகள்) - 4 ஆவது இடம்
தருண்தீப் ராய் (674 புள்ளிகள்) - 14 ஆவது இடம்
பிரவின் ஜாதவ் (658 புள்ளிகள்) - 39 ஆவது இடம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.