ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தந்தையர் நாளில் விராட் கோலியை பாராட்டிய அனுஷ்கா சர்மா!

தந்தையர் நாளை முன்னிட்டு தனது கணவரும் கிரிக்கெட் வீரருமான விராட் கோலியை பாராட்டும் விதமாக அனுஷ்கா சர்மா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

News image
விராட் கோலியுடன் அனுஷ்கா சர்மா - படம் | அனுஷ்கா சர்மா (இன்ஸ்டாகிராம்)
Updated On :16 ஜூன் 2024, 1:53 pm

DIN

தந்தையர் நாளை முன்னிட்டு தனது கணவரும் கிரிக்கெட் வீரருமான விராட் கோலியை பாராட்டும் விதமாக அனுஷ்கா சர்மா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தந்தையர் நாள் இன்று (ஜூன் 16) கொண்டாடப்படுகிறது. பிரபலங்கள் பலரும் அவர்களது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தந்தையர் நாளை முன்னிட்டு தனது கணவரும் கிரிக்கெட் வீரருமான விராட் கோலியை பாராட்டும் விதமாக அனுஷ்கா சர்மா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில் ஒரு ஓவியம் பகிரப்பட்டுள்ளது. அந்த ஓவியத்தில் குழந்தையின் பாத அச்சு ( வாமிகா) மற்றும் பெரிய ஆள் ஒருவரின் பாத அச்சும் (விராட் கோலி) இடம்பெற்றுள்ளது. மேலும், அந்தப் புகைக்கப்படத்தில் ஹேப்பி ஃபாதர்ஸ் டே என எழுதப்பட்டு அருகில் ஒரு சிவப்பு நிற எமோஜியும் இடம்பெற்றுள்ளது.

இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து நடிகை அனுஷ்கா சர்மா கூறியுள்ளதாவது: எப்படி ஒருவரால் பல விஷயங்களில் சிறப்பாக செயல்படுபவராக இருக்க முடியும் என்பது புரியவில்லை. நாங்கள் உங்களை விரும்புகிறோம் எனக் கூறியுள்ளார்.

விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு வாமிகா என்ற பெண் குழந்தையும், அக்காய் என்ற ஆண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.