தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரையிறுதிக்கான அணியில் இவர் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி: அஜிங்க்யா ரஹானே

அரையிறுதிக்கான மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

News image
Updated On :1 மார்ச் 2024, 12:03 pm

DIN

அரையிறுதிக்கான மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அந்த அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

ரஞ்சிக் கோப்பை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை முதல் அரையிறுதிப் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் அரையிறுதிப் போட்டியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேசம் அணிகளும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகளும் மோதுகின்றன.

இந்த நிலையில், அரையிறுதிக்கான மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அந்த அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

Story image

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஸ்ரேயாஸ் ஐயர் அனுபவம் வாய்ந்த வீரர். அவர் மும்பை அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். அரையிறுதிப் போட்டிக்கு அவர் அணியில் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவர் மும்பை அணிக்காக இதுவரை சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்துள்ளார். அரையிறுதிப் போட்டிக்காக அவருக்கு புதிதாக அறிவுரை வழங்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.