சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

அஸ்வின் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர்: ஜோ ரூட்

ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர் என இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

News image
ஜோ ரூட்
Updated On :4 மார்ச் 2024, 1:00 pm

DIN

ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர் என இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான 4 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 7 ஆம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.

இந்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர் என இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின்

ரவிச்சந்திரன் அஸ்வின்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் களத்தில் நிலைத்து ஆடுவது கடினம். அவர் எப்போதும் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை நிலைத்து ஆடவிடமால் வீழ்த்த வேண்டும் என முயற்சி செய்வார். மற்ற ஆஃப் ஸ்பின்னர்களைக் காட்டிலும் ரவிச்சந்திரன் அஸ்வின், பந்துவீச்சில் வித்தியாசமான யுக்திகளைக் கையாள்கிறார்.

ஓவரின் ஒவ்வொரு பந்துகளையும் அவர் வித்தியாசமாக வீசுபவர். அவர் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர். அவருக்கு எதிராக பேட் செய்யும் பேட்ஸ்மேன்கள் மிகுந்த திறன் உடையவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் மட்டுமே அஸ்வினின் பந்துவீச்சு சவால்களை அவர்களால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.