டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4-வது முறையாக இரண்டு வீரர்கள் தங்களது 100-வது டெஸ்ட் போட்டியில் ஒன்றாக களமிறங்குகின்றனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 4 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், நாளை மறுநாள் (மார்ச் 7) 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் தொடங்குகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ இருவரும் விளையாடும் 100-வது டெஸ்ட் போட்டியாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுபோன்று ஒரே நேரத்தில் இரண்டு வீரர்கள் தங்களது 100-வது டெஸ்ட் போட்டியில் 4-வது முறையாக விளையாடவுள்ளனர்.
இதற்கு முன்னதாக கடந்த 2000 ஆம் ஆண்டில் முதல் முறையாக இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஏதர்டன் மற்றும் அலெக் ஸ்டீவார்ட் தங்களது 100-வது டெஸ்ட் போட்டியில் ஒன்றாக களமிறங்கினர்.
அதன்பின் கடந்த 2006 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க வீரர்கள் ஜாக் காலிஸ், ஷான் பொல்லக் மற்றும் நியூசிலாந்து வீரர் ஸ்டீஃபன் பிளமிங் தங்களது 100-வது போட்டியில் ஒன்றாக விளையாடினர்.
மூன்றாவது முறையாக கடந்த 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் அலெய்ஸ்டர் குக் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் தங்களது 100-வது போட்டியில் ஒன்றாக களமிறங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியா - நியூசிலாந்து வணிக ஒப்பந்தம்: விவசாயிகள், இளைஞர்களுக்குப் பயன்!

தொடர் தோல்விகளால் வீரர்கள் சோர்வடைந்துவிட்டனர்: சிஎஸ்கே பயிற்சியாளர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரஷித் கான் விளையாடுவாரா?

அகில இந்திய துறைமுகங்களுக்கு இடையேயான கைப்பந்து போட்டி: வ.உ.சி துறைமுகம் சிறப்பிடம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு




