இதுவே எனது கிரிக்கெட் பயணத்தின் திருப்புமுனை; மனம் திறந்த அஸ்வின்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தனது கிரிக்கெட் பயணத்தின் திருப்பு முனையாக அமைந்ததாக அஸ்வின் தெரிவித்தார்.
இதுவே எனது கிரிக்கெட் பயணத்தின் திருப்புமுனை; மனம் திறந்த அஸ்வின்!

இங்கிலாந்துக்கு எதிரான 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடர் தனது கிரிக்கெட் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்ததாக இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடும் 100-வது டெஸ்ட் போட்டியாகும்.

இதுவே எனது கிரிக்கெட் பயணத்தின் திருப்புமுனை; மனம் திறந்த அஸ்வின்!
போட்டி ஆரம்பித்த முதல் நாளிலேயே தோற்றுவிட்டோம்: தமிழ்நாடு அணியின் பயிற்சியாளர்

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடர் தனது கிரிக்கெட் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டெஸ்ட் கிரிக்கெட்டில் 100-வது போட்டியில் விளையாடவுள்ளது மிகப் பெரிய தருணம். சென்றடையும் இடத்தைக் காட்டிலும் இந்தப் பயணம் மிகவும் சிறப்பானதாக இருக்கிறது. இந்தப் பயணத்தில் நிறைய ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளேன். நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி எனது கிரிக்கெட் பயணத்தின் திருப்புமுனைகளில் ஒன்றாக அமைந்தது. அந்தத் தொடர் குறித்து அதிகம் பேசப்பட்டது. ஆனால், அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் என்னுள் பல மாற்றங்களை கொண்டு வந்தது என்றார்.

இதுவே எனது கிரிக்கெட் பயணத்தின் திருப்புமுனை; மனம் திறந்த அஸ்வின்!
சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக எம்.எஸ்.தோனி..?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (மார்ச் 7) தர்மசாலாவில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com