சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஐபிஎல் மிகவும் பிரபலமானது, ஆனால்... 100-வது போட்டிக்கு முன்பு அஸ்வின் பேசியது என்ன?

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.

News image
Updated On :7 மார்ச் 2024, 1:03 pm

DIN

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (மார்ச் 7) தர்மசாலாவில் தொடங்கியது. இந்தப் போட்டி இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடும் 100-வது டெஸ்ட் போட்டியாகும்.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 100-வது போட்டிக்கான தொப்பியை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவருக்கு வழங்கி கௌரவப்படுத்தினார். 100-வது போட்டியில் விளையாடும் அஸ்வினின் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களும் பங்கெடுத்துக் கொண்டனர்.

100-வது போட்டிக்கான தொப்பியை பெற்ற பிறகு அஸ்வின் பேசியதாவது: ஐபிஎல் தொடர் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடராக இருந்து வருகிறது. அதிக அளவிலான சிறுவர்கள் டி20 போட்டிகளில் விளையாடி ஐபிஎல் போட்டிகளில் இடம்பிடிக்க வேண்டும் என விரும்புகின்றனர். அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதை நானும் விரும்புகிறேன். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை கற்றுத் தர முடியாத பல விஷயங்களைக் கற்றுத் தரும் என்பதை அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட் என்பது வாழ்க்கை போன்றது என நினைக்கிறேன். அழுத்தமான சூழலுக்கு ஏற்றவாறு உங்களை மாற்றிக் கொண்டு அதனை திறம்பட கையாள டெஸ்ட் கிரிக்கெட் கற்றுத் தரும். இது எனக்கு மட்டுமில்லாது சென்னையில் இருக்கும் எனது அப்பாவுக்கும் மிகவும் உணர்வுபூர்வமான தருணம். அவரால் இன்று இங்கு வரமுடியவில்லை. என்னுடைய அம்மா மற்றும் தாத்தாவின் உதவியோடு என்னை இந்த இடத்துக்கு அவர் கொண்டுவந்துள்ளார். கடினமான காலங்களில் எனது மனைவி எனக்கு உறுதுணையாக இருந்து என்னை ஊக்கப்படுத்தியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக எனது கிரிக்கெட் பயணத்தை எனது குழந்தைகளும் கொண்டாடி வருகின்றனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.