உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

நான் உங்களது 700-வது விக்கெட் என்ற இந்திய வீரர்; ஜேம்ஸ் ஆண்டர்சன் பகிர்ந்த சுவாரசியம்!

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 700-வது டெஸ்ட் விக்கெட் குறித்து மனம் திறந்துள்ளார்.

News image

ஜேம்ஸ் ஆண்டர்சன்

Updated On :14 மார்ச் 2024, 8:30 pm IST

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 700-வது டெஸ்ட் விக்கெட் குறித்து மனம் திறந்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 700-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

700-வது விக்கெட்டினை எடுப்பதற்கு முன்பு நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் மனம் திறந்துள்ளார்.

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்

இது தொடர்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியதாவது: இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் பேட் செய்து கொண்டிருந்தார். அப்போது ரன் எடுத்து மறுமுனைக்கு வந்த குல்தீப் யாதவ், நான் உங்களின் 700-வது விக்கெட்டாக மாறப் போகிறேன் என்றார். அவர் ஆட்டமிழக்க முயற்சி செய்யப் போகிறேன் எனக் கூறவில்லை. என்னுடைய பந்துவீச்சில் ஆட்டமிழந்து எனது 700-வது விக்கெட்டாக அவர் மாறிவிடுவாரோ என்ற உணர்வு அவருக்குள் இருந்ததாகக் கூறினார். அவர் இவ்வாறு கூறிய அந்தத் தருணம் நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம் என்றார்.

அந்தப் போட்டியில் குல்தீப் யாதவ், ஜேம்ஸ் ஆண்டர்சனின் 700-வது டெஸ்ட் விக்கெட்டாக மாறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.