மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

டி20 உலகக் கோப்பையில் இம்பாக்ட் பிளேயர் விதி இல்லாததால் இமாலய இலக்குகளை குவிக்க வாய்ப்பில்லை என இந்திய அணியின் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

News image

ஷிகர் தவான் - படம் | ஐபிஎல்

Updated On :19 மே 2024, 12:42 pm

டி20 உலகக் கோப்பையில் இம்பாக்ட் பிளேயர் விதி இல்லாததால் இமாலய இலக்குகளை குவிக்க வாய்ப்பில்லை என இந்திய அணியின் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இம்பாக்ட் பிளேயர் விதி நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இம்பாக்ட் பிளேயர் விதிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் இம்பாக்ட் பிளேயர் விதி இல்லாததால் இமாலய இலக்குகளை குவிக்க வாய்ப்பில்லை என இந்திய அணியின் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த ஆண்டு கிரிக்கெட் நிறைய மாறிவிட்டதைப் போல உணர்கிறேன். அதன் காரணமாகவே 250 ரன்கள் பலமுறை எடுக்கப்பட்டுள்ளன. வீரர்களின் மனநிலை முற்றிலுமாக மாறியுள்ளது. ஆனால், உலகக் கோப்பைத் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி கிடையாது. இம்பாக்ட் பிளேயர் விதியினால் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுகின்றனர். உலகக் கோப்பைத் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி இல்லாததால் இமாலய இலக்குகளை குவிப்பது கடினம். டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வலிமையான அணியாக உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.