எம்.எஸ்.தோனி அவரது கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடியதாக நினைக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான வாழ்வா? சாவா? போட்டி நேற்று (மே 18) பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
இந்த நிலையில், எம்.எஸ்.தோனி அவரது கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடியதாக நினைக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கேவின் முன்னாள் வீரருமான அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

அம்பத்தி ராயுடு
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இதனை எம்.எஸ்.தோனியின் கடைசி ஐபிஎல் போட்டி என நினைக்கவில்லை. அவரது கிரிக்கெட் பயணத்தை இப்படி முடிப்பதைப் பார்க்க நான் விரும்பவில்லை. அவர் ஆட்டமிழந்தபோது, ஏமாற்றத்துடன் காணப்பட்டார். பிளே ஆஃப் போட்டிக்குத் தகுதி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என அவர் நினைத்தார். இம்பாக்ட் பிளேயர் விதியை பிசிசிஐ நீக்கக் கூடாது. நாங்கள் எம்.எஸ்.தோனி விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறோம். ஆனால், அந்த முடிவு பிசிசிஐ-ன் கைகளில்தான் உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லக்னௌ வீரர் ஹசரங்கா விலகல்! மாற்றுவீரர் யார் தெரியுமா?

ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி - புகைப்படங்கள்

இது வெறும் ஆரம்பம் மட்டுமே; முகமது ஷமியை பாராட்டிய முன்னாள் வீரர்!

ஐபிஎல் திருவிழா!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


