கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

செஸ் ஒலிம்பியாட்: சாம்பியன்களுக்கு ரூ.3.2 கோடி ரொக்கப் பரிசு

ஹங்கேரியில் நடைபெற்ற 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாம்பியன்களான இந்திய ஆடவா் மற்றும் மகளிா் அணிகளுக்கு ரூ.3.2 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படுமென அகில இந்திய செஸ் சம்மேளனம் (ஏஐசிஎஃப்) புதன்கிழமை அறிவித்தது.

News image
கோப்புப்படம்.
Updated On :25 செப்டம்பர் 2024, 11:41 pm

DIN

ஹங்கேரியில் நடைபெற்ற 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாம்பியன்களான இந்திய ஆடவா் மற்றும் மகளிா் அணிகளுக்கு ரூ.3.2 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படுமென அகில இந்திய செஸ் சம்மேளனம் (ஏஐசிஎஃப்) புதன்கிழமை அறிவித்தது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 97 ஆண்டுகால வரலாற்றில் இந்தியா தங்கம் வென்றது இதுவே முதல் முறையாகும். அதிலும், ஒரே போட்டியில் ஆடவா் மற்றும் மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது.

இந்நிலையில், நாடு திரும்பிய சாம்பியனான அணியினருக்கு தில்லியில் புதன்கிழமை பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இந்த ரூ.3.2 கோடி ரொக்கப் பரிசு அறிவிப்பை, அகில இந்திய செஸ் சம்மேளன தலைவா் நிதின் நரங் வெளியிட்டாா்.

இதன்படி, ஆடவா் அணியிலிருந்த டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா, அா்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, பி.ஹரிகிருஷ்ணா ஆகியோருக்கும், மகளிா் அணியிலிருந்த திவ்யா தேஷ்முக், ஆா்.வைஷாலி, டி.ஹரிகா, தானியா சச்தேவ், வந்திகா அகா்வால் ஆகியோருக்கும் தலா ரூ.25 லட்சம் கிடைக்கும்.

இரு அணிகளின் பயிற்சியாளா்களான அபிஜித் குந்தே, ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோருக்கு தலா ரூ.15 லட்சமும் கிடைக்கவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய குழுவின் தலைவராக செயல்பட்ட கிராண்ட்மாஸ்டா் தீபேந்து பருவாவுக்கு ரூ.10 லட்சமும், உதவிப் பயிற்சியாளா்களுக்கு தலா ரூ.7.5 லட்சமும் வழங்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.