நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடருக்குப் பிறகு டி20 உலகக் கோப்பை குறித்துப் பேசிய ராகுல் டிராவிட்!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதில் நிறைய தெரிவுகள் இருப்பதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 ஜனவரி 2024, 8:36 pm IST

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதில் நிறைய தெரிவுகள் இருப்பதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர் நாயகனாக ஷிவம் துபே தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதில் நிறைய தெரிவுகள் இருப்பதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு பல காரணங்களுக்காக பல்வேறு வீரர்கள் அணியில் விளையாட வைக்கப்பட்டனர். ஆனால், டி20 உலகக் கோப்பை இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ள இந்த நேரத்தில் இந்திய அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்வதில் நிறைய தெரிவுகள் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இளம் வீரர்கள் தங்களது திறமையை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் வெளிப்படுத்தியுள்ளனர். வேறு எந்தெந்த துறைகளில் இந்திய அணியின் பலம் கூட்டப்பட வேண்டும்  என்பதில் கவனம் கொடுக்கப்பட்டு வருகிறது. துரதிருஷ்டவசமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடருக்குப் பிறகு அணி வீரர்கள் அனைவரும் ஒன்றாக செயல்படும் வாய்ப்பில்லை. ஐபிஎல் போட்டிகளில் அவர்கள் விளையாடும் விதத்தை கவனித்து அவர்களுக்கான இடங்கள் தேர்வு செய்யப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.