ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இங்கிலாந்து தயாராக இல்லை: முன்னாள் இங்கிலாந்து வீரர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இங்கிலாந்து முழுவதும் தயாராக இல்லை என அந்த அணியின் முன்னாள் வீரர் அலெய்ஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 ஜனவரி 2024, 12:35 pm

DIN

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இங்கிலாந்து முழுமையாகத் தயாராக இல்லை என அந்த அணியின் முன்னாள் வீரர் அலெய்ஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 25  ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. 

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இங்கிலாந்து முழுமையாக தயாராக இல்லை என அந்த அணியின் முன்னாள் வீரர் அலெய்ஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.

Story image

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணிக்கு போதுமான பயிற்சி இல்லை. இந்தியாவுக்கு எதிராக கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியாவுடன் எங்களுக்கு 3 பயிற்சி ஆட்டங்கள் இருந்தன. அந்த பயிற்சியாட்டங்கள் எங்களை தயார்படுத்திக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் இல்லாததால் போட்டியை நடத்தும் நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. இது ஆரோக்கியமான டெஸ்ட் கிரிக்கெட் கிடையாது.

இங்கிலாந்து அணி பேஷ்பால் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தின் பேஷ்பால் அணுகுமுறைக்கு சிறப்பானதாக அமைந்தது. அந்தத் தொடரை இங்கிலாந்து முழுமையாக கைப்பற்றியது. இந்தியாவுக்கு எதிராகவும் இங்கிலாந்து அணி தனது பேஷ்பால் யுக்தியைப் பயன்படுத்தி வெற்றி பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.