ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

2025-இல் தோல்வியே சந்திக்காத பார்சிலோனா: காலிறுதியில் (4-0) அபார வெற்றி!

சாம்பியன்ஸ் லீக் முதல்கட்ட காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என அசத்தல் வெற்றி.

News image
பார்சிலோனா அணி வீரர்கள். - படம்: ஏபி
Updated On :10 ஏப்ரல் 2025, 7:08 am

DIN

சாம்பியன்ஸ் லீக்கில் டார்ட்மண்ட் உடனான முதல்கட்ட காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என அசத்தலாக வென்றது.

இந்தப் போட்டியில் ரபீனியா 5ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.

அடுத்ததாக 48, 66ஆவது நிமிஷங்களில் ராபர்ட் லெவண்டாவ்ஸ்கி இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார்.

கடைசியில் 77அவது நிமிஷத்தில் லாமின் யமால் கோல் அடிக்க 4-0 என அசத்தல் வெற்றி பெற்றது.

டார்மண்ட் அணி அடித்த ஒரு கோலும் ஆஃப் சைடினால் மறுக்கப்பட்டது.

கடைசி கட்ட நேரத்தில் இலக்கை நோக்கி அடித்த பந்தும் பார்சிலோனா கோல் கீப்பரால் தடுக்கப்பட்டது அந்த அணிக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

61 சதவிகித பந்தினை தனது கட்டுக்குள் வைத்திருந்த பார்சிலோனா அணி 88 சதவிகித துல்லியத்துடன் பந்தினை பாஸ் செய்து அசத்தினார்கள்.

இந்தப் போட்டியில் ராபர்ட் லெவண்டாவ்ஸ்கி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

2-ஆம் கட்ட காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா - டார்மண்ட் ஏப்.16ஆம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது.

2025இல் 23 போட்டிகளிலும் தோல்வியே சந்திக்காத அணியாக பார்சிலோனா அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.