ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

16 வயதில் சாதனை படைத்த லிவர்பூல் வீரர்!

லிவர்பூல் கால்பந்து வீரர் நிகழ்த்திய சாதனை குறித்து...

Liverpool's Rio Ngumoha celebrates after scoring his side's third goal during the English Premier League

16 வயதில் சாதனை படைத்த லிவர்பூல் வீரர்.. - படம்: ஏபி

Published On :26 ஆகஸ்ட் 2025, 5:43 pm IST

லிவர்பூல் கால்பந்து அணி வீரர் 16 வயதிலேயே கோல் அடித்து சாதனை படைத்துள்ளார்.

பிரீமியர் லீக்கில் குறைந்த வயதில் கோல் அடித்தவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் இன்று காலை நடைபெற்ற போட்டியில் லிவர்பூல் கால் அணியும் நியூகேஸ்டல் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் 35,46-ஆவது நிமிஷங்களில் லிவர்பூல் அணியினர் கோல் அடிக்க, இரண்டாம் பாதியில் மீண்டெழுந்த நியூகேஸ்டல் அணியினர் 57,88-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து 2-2 என சமன்படுத்தினர்.

பின்னர், 96-ஆவது நிமிஷத்தில் மாற்றுவீரராக வந்த 16 வயதேயான லிவர்பூல் வீரர் ரியோ குமோகா 100-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார்.

இதன்மூலம் லிவர்பூல் அணி 3-2 என வென்றது. நடப்பு சாம்பியனான லிவர்பூல் அணி புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்துள்ளது.

ரியோ குமோகாவுக்கு 16 ஆண்டுகள் 361 நாட்கள் ஆகின்றன. பிரீமியர் லீக் வரலாற்றில் 4-ஆவது இளம் வீரராகவும் லிவர்பூல் அணியில் முதல் வீரராகவும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Summary

The Liverpool football player has set a record by scoring a goal at the age of 16.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.