விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

நடுவரை துரத்தி துரத்தி அடித்த வீரர்கள்... பாகிஸ்தான் கால்பந்து போட்டியில் மோதல்!

பாகிஸ்தானில் அரையிறுதிப் போட்டியில் வீரர்களிடையே நடந்த மோதல் குறித்து...

News image

பாகிஸ்தான் விளையாட்டு ஆணைய இலச்சினை. - படம்: முகநூல் / பாகிஸ்தான் விளையாட்டு ஆணையம்.

Updated On :11 டிசம்பர் 2025, 2:37 pm IST

பாகிஸ்தானில் நேஷன்ஸ் கேம்ஸ் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் இரு அணிகளுக்கும் மோதல் வெடித்தது.

ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இது குறித்து விசாரணை செய்யப்படுமென பாகிஸ்தான் விளையாட்டு வாரியம் கூறியுள்ளது.

கராச்சியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஆர்மி அணியும் டபிள்யூஏபிடிஏ அணியும் மோதின.

மிகவும் பரபரப்பாகச் சென்ற இந்தப் போட்டியில் 4-3 என பாகிஸ்தான் ஆர்மி அணி வென்றது.

இறுதி விசில் அடிக்கப்பட்டதும் இரு அணி வீரர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.

பார்வையாளர்கள் இந்தக் காட்சிகளை ரசித்து பார்த்தமாதிரியான விடியோக்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் கிண்டல் செய்யப்பட்டன.

இது குறித்து பாகிஸ்தான் ஒலிம்பிக் அசோசியேஷன் கூறியதாவது:

இந்தச் சண்டைக்கும் காரணமான அல்லது சண்டையைத் தொடங்கிய வீரர்கள் மீது எங்களது தனிப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்.

தவறு உள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மற்ற வீரர்கள், நடுவர்கள் தலையிட்டு காப்பாற்றும்வரை சில டபிள்யூஏபிடிஏ அணி வீரர்கள் போட்டியின் நடுவரை அவரது அறை வரைக்கும் துரத்தி துரத்தி அடித்துள்ளார்கள்.

நடுவரின் பெனால்டி குறித்து தீர்ப்பினால் வாப்டா அணியினர் அதிருப்தி அடைந்ததால் இந்தமாதிரி நடந்ததாகக் கூறப்படுகிறது.

Summary

The Pakistan Football Federation and the country's apex Olympic body are probing an ugly incident that took place after a semi-final match between Pakistan Army and the WAPDA team in Karachi, with several players and officials sustaining injuries.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.