
நேஷ்னல் லீக் கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஜெர்மனியில் நடைபெற்ற நேஷனல் லீக் அரையிறுதியில் போர்ச்சுகல் அணியும் ஜெர்மனியும் மோதின.
இந்தப் போட்டியில் 2-1 என போர்ச்சுகல் அணி வென்றது. இதில், முதல் பாதியில் இரு அணிகளுமே கோல்கள் அடிக்காத நிலையில் இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே (48’) ஜெர்மனி கோல் அடித்தது.
அடுத்ததாக போர்ச்சுகல் 63, 68ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து முன்னிலை வகித்தது.
சாபத்தை முறியடித்த ரொனால்டோ
இதில் ரொனால்டோ 68ஆவது நிமிஷத்தில் நூனோ மென்டிஸ் செய்த அசிஸ்டில் கோல் அடித்து அசத்தினார்.
கடைசியாக 2000ஆம் ஆண்டு ஜெர்மனியை வீழ்த்தியிருந்த போர்ச்சுகல் தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு வென்று வரலாற்றை மாற்றியமைத்துள்ளது.
கடைசி 5 போட்டிகளிலும் ரொனால்டோ ஜெர்மனியுடன் கோல் அடிக்காத நிலையில் அதையும் இந்தப் போட்டியில் முறியடித்தார்.
இதன் மூலம், ரொனால்டோ தனது 137-ஆவது சர்வதேச கோலை நிறைவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.