ஐடிடி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதியில் இந்தியாவுடன் தோற்ற நிலையில், ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஜாம்பவான், ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு பெற்றாா். டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகளில் ஸ்மித் தொடா்ந்து விளையாடுவாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2010-ல் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒரு நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் அறிமுகமானாா். 170 ஒரு நாள் ஆட்டங்களில் 5,800 ரன்களை எடுத்துள்ளாா்; 12 சதம் மற்றும் 35 அரை சதங்களை விளாசியுள்ளாா். மேலும், ஸ்டீவ் ஸ்மித் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா்.
இரு முறை ஒருநாள் உலகக் கோப்பை வென்ற ஆஸி. அணியிலும் இடம் பெற்றிருந்தாா்.
இதுதொடா்பாக ஸ்மித் கூறியது: ஒருநாள் ஆட்டங்களில் எனது பயணம் சாதனையாக இருந்தது. சிறந்த நினைவுகளை தந்துள்ளது. இரு உலகக் கோப்பைகளை வென்றது பசுமையானது. தற்போது விலக இதுவே சரியான தருணம் என்றாா்.
ஏற்கெனவே ஓபனா் டேவிட் வாா்னா் விலகியதால் அந்த இடத்தை நிரப்ப சரியான வீரா் கிடைக்கவில்லை. தற்போது ஜாம்பவான் ஸ்மித்தும் ஓய்வு பெறுவதால், ஆஸி. அணியில் சரியான வீரரை தோ்வு செய்வது கடினம் ஆகியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எம்எல்சி தொடரில் 500 ரன்களை கடந்த ஸ்டீவ் ஸ்மித்..! புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்!

செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்துக்கு சிறப்பு விருது

பல்கலை. பேராசிரியா்கள் ஓய்வுபெறும் வயதை 65-ஆக உயா்த்தக் கோரிய மனு: அரசு பரிசீலிக்க உத்தரவு







