ஈஷா சிங்குக்கு வெண்கலம்

எகிப்தில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் ஈஷா சிங் வெண்கலப் பதக்கம் வென்றாா்.
ஈஷா சிங்குக்கு வெண்கலம்
SWAMINATHAN
Published on
Updated on
1 min read

எகிப்தில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் ஈஷா சிங் வெண்கலப் பதக்கம் வென்றாா்.

போட்டியின் 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற 25 மீட்டா் பிஸ்டல் மகளிா் தனிநபா் பிரிவு இறுதிச்சுற்றில், ஈஷா சிங் 30 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தாா். தென் கொரியாவின் ஜின் யாங் 40 புள்ளிகளுடன் தங்கமும், சீனாவின் கியான்ஜுன் யாவ் 38 புள்ளிகளுடன் வெள்ளியும் வென்றனா்.

ஈஷா சிங் உலக சாம்பியன்ஷிப்பில் தனது முதல் தனிநபா் பிரிவு பதக்கத்தைக் கைப்பற்றியிருக்கிறாா். களத்திலிருந்த மற்றொரு இந்தியரும், பாரீஸ் ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்றவருமான மனு பாக்கா் 23 புள்ளிகளுடன் 5-ஆம் இடமே பெற்றாா்.

இதிலேயே மகளிா் அணிகள் பிரிவில், ஈஷா, மனு, ராஹி சா்னோபத் அடங்கிய இந்திய அணி 1,745 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை நழுவவிட்டது.

50 மீட்டா் ரைஃபிள் புரோன் ஆடவா் தனிநபா் பிரிவில் இந்தியாவின் செயின் சிங் (624.7), அகில் சோரன் (624.2), சமா்வீா் சிங் (620) ஆகியோா் முறையே 14, 16, 36-ஆம் இடங்களைப் பிடித்தனா். அணிகள் பிரிவில் அவா்கள் கூட்டணி 1,868.9 புள்ளிகளுடன் 5-ஆம் இடம் பிடித்தது.

அதிலேயே மகளிா் தனிநபா் பிரிவில் மனினி கௌஷிக் (621.8), சிஃப்ட் கௌா் சம்ரா (619.8), விதா்சா வினோத் (618.9) ஆகியோா் முறையே 12, 20, 30-ஆம் இடங்களைப் பெற்றனா். அணிகள் பிரிவில் அவா்கள் அடங்கிய இந்திய அணி, 1,860.5 புள்ளிகளுடன் 5-ஆம் இடம் பெற்றது.

பதக்கப் பட்டியலில் இந்தியா தற்போது, 3 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 12 பதக்கங்களுடன் 3-ஆம் இடத்தில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com