2030 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் குஜராத்தின் அகமதாபாத் நகரத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளாஸ்கோ நகரத்தில் இன்று (நவ. 26) நடைபெற்ற காமென்வெல்த் விளையாட்டின் பொது அவைக்கூட்டத்தில், 2030 ஆம் ஆண்டின் காமன்வெல்த் போட்டிகளை அகமதாபாத் நகரில் நடத்த முன்வருவதாக இந்தியா விருப்பத்தை முன்வைத்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் விருப்பத்தை 74 காமன்வெல்த் நாடுகள் அங்கீகரித்துள்ளன. இதன்மூலம், வரும் 2030 ஆம் ஆண்டின் நூற்றாண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவின் தலைமையில் குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானவுடன், கிளாஸ்கோவில் நடைபெற்ற பொது அவை அரங்கில் இருந்த இந்திய இசை மற்றும் நடனக்கலைஞர்கள் இசை வாத்தியங்களுடன் நடனமாடி அனைவரையும் உற்சாகமடைய செய்தனர்.
முன்னதாக, கனடாவின் ஹாமில்டன் நகரில் கடந்த 1930 ஆம் ஆண்டு தொடங்கிய காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் முதல்முறையாக 2010 ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Summary
It has been officially announced that the 2030 Commonwealth Games will be held in the city of Ahmedabad.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: ஐஐடி-கரக்பூர் வளாகத்தில் மாணவரின் சடலம் மீட்பு

அகமதாபாத் திடலை தனது கோட்டையாக மாற்றிய ஷுப்மன் கில்!

ரூ. 10 லட்சத்துக்குள் 7 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் ரெனால்ட்!

2030 காமன்வெல்த் போட்டிகளில் இரு இந்திய விளையாட்டுகள் - அமைச்சா் மாண்டவியா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


