யு20 சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டியில் வங்கதேசத்துடன் மோதும் இந்தியா!
தெற்காசிய யு20 சாம்பியன்ஷிப் அரையிறுதியில் வென்ற இந்திய அணி குறித்து...

கோல் அடித்த மகிழ்ச்சியில் யு20 இந்திய வீரர்.
படம்: எக்ஸ் / இந்தியன் ஃபுட்பால்.

கோல் அடித்த மகிழ்ச்சியில் யு20 இந்திய வீரர்.
படம்: எக்ஸ் / இந்தியன் ஃபுட்பால்.
தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் யு20 சாம்பியன்ஷிப் அரையிறுதியில் இந்திய அணி பூடானை 5-0 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்குப் பிறகு, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி வங்கதேசத்துடன் நாளை (ஏப்.3) பலப்பரீட்சை செய்யவிருக்கிறது.
தெற்காசிய யு20 கால்பந்து வரலாற்றில் அதிக முறை (4) இந்திய அணியே கோப்பை வென்றுள்ளது. நடப்பு சாம்பியனான இந்திய அணி 2024ல் கோப்பை வென்ற வங்கதேசம் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதுகிறது.
பூடானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 5, 44, 55, 56, 90+2 ஆகிய நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்கள். ரோஹன் சபமயூம் 2 கோல்கள் அடித்து அசத்தினார்.
குரூப் சுற்றில் வங்கதேசத்துடன் மோதிய இந்திய அணி 1-1 என சமநிலையில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் விவகாரத்தினால், அந்த அணி டி20 உலகக் கோப்பையை புறக்கணித்ததும் கவனிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...