12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பது முக்கியம்..! யமாலுக்கு ஆதரவளித்த வினிசியஸ்!

லாமின் யமாலுக்கு ஆதரவாகப் பேசிய வினிசியஸ் குறித்து...

Lamine Yamal, Vinicius Junior.

லாமின் யமால், வினிசியஸ் ஜூனியர். - ஏபி

Published On :

ரியல் மாட்ரிட் நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர் பார்சிலோனா நட்சத்திரம் லாமின் யமாலுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

எகிப்துக்கு எதிரான நட்பு ரீதியான போட்டியில் ஸ்பெயின் அணியின் ரசிகர்கள் எதிரணி வீரர்களை (எகிப்து) கிண்டல் செய்ய, “யார் எல்லாம் குதிக்கவில்லையோ அவர்கள் எல்லாம் முஸ்லிம்கள்” என முழக்கமிட்டனர்.

லாமின் யமால் தனது இன்ஸ்டா பதிவில், ”நான் முஸ்லிம்தான், அல்ஹம்துலில்லாஹ் (இறைவனுக்கு நன்றி)” எனக் குறிப்பிட்டு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவுக்கு ரியல் மாட்ரிட் நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர் ஆதரவு தெர்வித்துள்ளார். முன்னதாக, நிற வெறிக்கு எதிராக வினிசியஸ் ஜூனியர் பதிவிட்டிருந்தார். அதே காரணத்தினால், அவருக்கு பேலந்தோர் விருது மறுக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இந்த நிலையில் வினிசியஸ் ஜூனியர் பேசியிருப்பதாவது:

இது எப்போது பேசுவதற்கு சிரமம் ஏற்படுத்தும் விஷயங்கள் ஆகும். ஆனால், இதுமாதிரியான விஷயங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. லாமின் பேசியது முக்கியத்துவம் பெருகிறது. இது மற்றவர்களுக்கு உதவும்.

நாம் பிரபலமாக இருக்கிறோம்; பணம் இருக்கிறது, இதை சமாளிக்கலாம். ஆனால், ஏழை கறுப்பின மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதனால், இந்தப் போராட்டம் தொடருமென நம்புகிறேன் என்றார்.

Summary

Vinicius Junior hails Lamine Yamal for condemning anti-Muslim chants

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.