12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பார்சிலோனா அபார வெற்றி: ஆட்ட நாயகன் விருது வென்ற லாமின் யமால்!

லா லிகா கால்பந்துத் தொடரில் அசத்திய பார்சிலோனா குறித்து...

Lamine Yamal, celebrating the goal he scored.

கோல் அடித்த மகிழ்ச்சியில் லாமின் யமால். - படம்: எக்ஸ் / எஃப்சி பார்சிலோனா.

Published On :

லா லிகா கால்பந்துத் தொடரில் பார்சிலோனா அணி தனது சொந்த திடலனா ‘கேம்ப் நௌ’வில் விளையாடியது. இந்தப் போட்டியில் லாமின் யமால் ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.

கடந்த வாரம் சாம்பியன்ஸ் லீக்கில் மோசமாக விளையாடிய பார்சிலோனா அணி லா லிகா தொடரில் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களுக்கு ஆறுதல்களை அளித்துள்ளது.

கேம்ப் நௌ திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 4-1 என பார்சிலோனா அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஃபெர்ரன் டோரஸ் 9, 25ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தார். 87, 89ஆவது நிமிஷங்களில் லாமின் யமால், ராஷ்போர்டு கோல் அடித்தார்கள்.

எஸ்பானியோல் அணி சார்பாக 56ஆவது நிமிஷத்தில் லொஜானோ ஆறுதல் கோல் அடித்தார். இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப் பட்டியலில் பார்சிலோனா முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

இந்தப் போட்டியில் 2 அசிஸ்ட், 1 கோல் அடித்த லாமின் யமால் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். சாம்பியன்ஸ் லீக்கின் இரண்டாவது கட்ட போட்டியில் அத்லெடிகோவை வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Summary

Barcelona's Stunning Victory: Top Spot by a 9-Point Margin!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.