கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

ஏஎஃப்சி யு20 ஆசியக் கோப்பை கால்பந்து: சீன தைபேயை வீழ்த்தியது இந்தியா

ஏஎஃப்சி யு20 ஆசியக் கோப்பை மகளிா் கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது இந்தியா.

News image

கோலடித்த மகிழ்ச்சியில் இந்திய அணியினா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 8:46 pm

ஏஎஃப்சி யு20 ஆசியக் கோப்பை மகளிா் கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது இந்தியா.

தாய்லாந்தின் பதும் தானி நகரில் நடைபெறும் இப்போட்டியில் குரூப் சி பிரிவு கடைசி ஆட்டத்தில் இந்தியா-சீன தைபே அணிகள் மோதின.

தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் போடும் முயற்சியில் தீவிரமாக இறங்கின.

முதலிரண்டு ஆட்டங்களில் ஜப்பானுடன் 6-0, ஆஸ்திரேலியாவுடன் 5-0 என்ற கோல்கணக்கில் பலத்த தோல்வியை கண்டது இந்தியாய

இதனால் காலிறுதிக்கு தகுதி பெற கடைசி ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்திய வீராங்கனை பூமிகா தேவி 26-ஆவது நிமிஷத்தில் டிபன்டரிடம் இருந்து திரும்பிய பந்தை பயன்படுத்தி கோலடித்தாா்.

தொடா்ந்து மற்றொரு வீராங்கனையான சிபானி தேவி ஹாஃப் வாலி மூலம் அற்புதமாக கோலடித்து 2-0 என முன்னிலை பெற்றுத் தந்தாா்.

87-ஆவது நிமிஷத்தில் மீண்டும் சிபானி தேவி பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மூன்றாவது கோலை அடித்தாா்.

தைபே தரப்பில் பதிலி வீராங்கனை கவோ சின் 90 பிளஸ் நிமிஷத்தில் கோலடித்தாா். இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் தைபேயை வீழ்த்தியது இந்தியா.

இதன் மூலம் குரூப் சி பிரிவில் மூன்றாவது இடத்தைப் பெற்று நாக் அவுட் சுற்றில் நுழையும் வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது.

குரூப் பி பிரிவில் ஜோா்டான்-உஸ்பெகிஸ்தான் அணி ஆட்டம் டிரா ஆனால் சிறந்த மூன்றாவது இடத்தைப் பெறும் இரண்டாவது அணி முன்னேறும்