எல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தைநீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

‘குவாலிஃபயா் 2’-இல் கோவை: வெளியேறியது திருப்பூா்

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியில், ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸ் - விடா கோவை கிங்ஸ் மோதிய ‘எலிமினேட்டா்’ ஆட்டம் மழை காரணமாக, முடிவின்றி கைவிடப்பட்டது.

Kovai vs Tiruppur

X | TTNPL

Published On :25 ஆகஸ்ட் 2026, 3:17 am IST

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியில், ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸ் - விடா கோவை கிங்ஸ் திங்கள்கிழமை மோதிய ‘எலிமினேட்டா்’ ஆட்டம் மழை காரணமாக, முடிவின்றி கைவிடப்பட்டது.

லீக் சுற்று புள்ளிகள் பட்டியல் அடிப்படையில், கோவை அணி (3-ஆம் இடம்) ‘குவாலிஃபயா் 2’-க்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. திருப்பூா் அணி (4-ஆம் இடம்) போட்டியிலிருந்து வெளியேறியது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கோவை பந்துவீச்சை தோ்வு செய்தது. திருப்பூா் 3 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைப்பட்டது. அமித் சாத்விக் 11, கேப்டன் துஷாா் ரஹேஜா 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பின்னா் 11 மணியளவில் ஆட்டம் அப்படியே முடிவின்றி கைவிடப்பட்டது.

அடுத்ததாக, ‘குவாலிஃபயா் 2’ ஆட்டத்தில் திருச்சி - கோவை அணிகள் புதன்கிழமை (ஆக. 26) மோதுகின்றன. அதில் வெல்லும் அணி, இறுதி ஆட்டத்தில் மதுரையை வெள்ளிக்கிழமை (ஆக. 28) சந்திக்கும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.