பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்ட்!

அமெரிக்காவின் மியாமி நகரில் உருகுவே - கேப் வெர்ட் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

News image

உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்ட் - AP

Updated On :23 ஜூன் 2026, 1:47 am IST

அமெரிக்காவின் மியாமி நகரில் உருகுவே - கேப் வெர்ட் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது. இரு முறை சாம்பியனான உருகுவேக்கு, முதல்முறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் கேப் வெர்ட் கடும் சவால் அளித்தது.

இந்த ஆட்டத்தில் கேப் வெர்ட் வீரர் கெவின் பினா 21-ஆவது நிமிஷத்தில் ஃப்ரீ கிக் வாய்ப்பில் தனது அணிக்காக கோல் அடித்து, உருகுவேயை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். சுதாரித்துக் கொண்ட உருகுவே தரப்பில், மேக்ஸி அராஜோ 44-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.

தொடர்ந்து அந்த அணியின் அகஸ்டின் கேனோபியோ (45+6') கோல் அடிக்க, முதல் பாதியை 2-1 முன்னிலையுடன் உருகுவே நிறைவு செய்தது. ஆனால் விட்டுக் கொடுக்காத கேப் வெர்ட், 2-ஆவது பாதியில் 61-ஆவது நிமிஷத்தில் ஹேலியோ வரெலா அடித்த கோல் மூலமாக, ஆட்டத்தை 2-2 என சமநிலைக்குக் கொண்டு வந்தது.

நெருக்கடிக்கு உள்ளான உருகுவே மீண்டும் முன்னிலை பெறுவதற்காகக் கடினமாக முயற்சிக்க, கேப் வெர்ட் அதற்கு வாய்ப்பே அளிக்கவில்லை. முடிவில் ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

முதல் உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் மிகச் சிறிய அணியான கேப் வெர்ட், முதல் ஆட்டத்தில் ஸ்பெயினுடன் கோல் இன்றி டிரா செய்து அந்த அணிக்கு சவால் அளித்த நிலையில், இந்த ஆட்டத்தில் 2 கோல்களும் அடித்து உருகுவேக்கு கடும் போட்டியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.