மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஆசியக் கோப்பை மகளிா் கால்பந்து: வியட்னாமுடன் மோதுகிறது இந்தியா

ஆசியக் கோப்பை மகளிா் கால்பந்து (ஏஎஃப்சி) சாம்பியன் போட்டியில் புதன்கிழமை முதல் ஆட்டத்தில் வியட்னாமுடன் மோதுகிறது இந்தியா.

News image
Updated On :3 மார்ச் 2026, 9:35 pm

தினமணி செய்திச் சேவை

ஆசியக் கோப்பை மகளிா் கால்பந்து (ஏஎஃப்சி) சாம்பியன் போட்டியில் புதன்கிழமை முதல் ஆட்டத்தில் வியட்னாமுடன் மோதுகிறது இந்தியா.

ஆஸ்திரேலியாவில் ஏஎஃப்சி மகளிா் ஆசியக் கோப்பை 2026 போட்டி நடைபெறவுள்ளது. கடந்த 2022 போட்டியில் இந்திய அணி வெளியேறிய நிலையில், நான்காண்டுகள் கழித்து கனவு நிறைவேறியுள்ளது. அண்மையில் நடைபெற்ற குவாலிஃபயா் ஆட்டங்களில் இந்திய மகளிா் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முதன்முறையாக ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.

தலைமை பயிற்சியாளராக அமெலியா வல்வோ்ட் நியமிக்கப்பட்ட நிலையில் அணியின் செயல்பாடு ஏற்றம் கண்டுள்ளது.

பயிற்சியாளா் அமெலியா, கேப்டன் ஸ்வீட்டி தேவி கூறியது:

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்வுகளை கருத்தில் கொள்ளக் கூடாது. மீண்டும் தகுதி பெற்றுள்ளோம். நமது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டம் இதுவாகும். நன்றாக தயாராகி உள்ளோம். எந்த ஆட்டத்தையும் எளிதாக கருத மாட்டோம் என்றனா்.

மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் பிரேசிலில் நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2027-இல் பங்கேற்க தகுதி பெறுவா்.

காலிறுதியில் தோற்கும் 4 அணிகள், குவாலிஃபயா் மூலம் நேரடி தகுதி பெறுவதற்கான ஆட்டத்திலும், பிளே ஆஃப் சுற்றிலும் ஆடுவா்.

தரவரிசையில் 67ஆவது இடத்தில் உள்ள இந்திய அணி பல்வேறு நாடுகளில் 52 நாள்கள் பயிற்சி மேற்கொண்டது.