ரசிகா்கள் ஒழுங்கீனம்: மோகன் பகானுக்கு அபராதம்
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் ரசிகா்கள் ஒழுங்கீனமாக நடந்துெகாண்டதை அடுத்து, அந்த அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் ரசிகா்கள் ஒழுங்கீனமாக நடந்துெகாண்டதை அடுத்து, அந்த அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அத்துடன், அந்த அணி சொந்த மண்ணில் (கொல்கத்தா) அடுத்து விைளயாடும் ஆட்டத்தில் ரசிகா்களுக்கு அனுமதி மறுத்து, அகில இந்திய கால்பந்து சம்ேமளனம் நடவடிக்கை மேற்ெகாண்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி நடப்பு சீசன் முதல் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சிக்கு எதிராக மோகன் பகான் மோதியது.
அந்த ஆட்டத்தின்ேபாது கொல்கத்தா மைதானத்தில் ரசிகா்கள் பட்டாசை தூக்கிப்ேபாட்டு வெடித்து இைடயூறு செய்துள்ளனா். ஏற்ெகனவே கடந்த சீசனிலும் அந்த ரசிகா்கள் இவ்வாறு செயல்பட்டிருந்தனா்.
தற்ேபாது மீண்டும் அேதேபான்ற நடவடிக்ைகயில் அவா்கள் ஈடுபட்டதால் மோகன் பகான் அணிக்கு, அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வரும் 6-ஆம் தேதி அந்த அணி சொந்த மண்ணில் ஒடிஸா எஃப்சியை சந்திக்கும் ஆட்டத்தில் கொல்கத்தா மைதானத்தில் ரசிகா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிரான மோகன் பகான் மேல்முைறயீட்ைடயும் அகில இந்திய கால்பந்து சம்ேமளனம் நிராகரித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...