ஆசியக் கோப்பை மகளிா் கால்பந்து போட்டியில் ஜப்பான் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி ஆட்டம் சிட்னியில் ஜப்பான்-ஆஸி.அணிகளுக்கு இடையே சனிக்கிழமை நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் கோல் போடும் முயற்சியில் தீவிரம் காட்டின. எனினும் முதல் பாதியில் 17-ஆவது நிமிஷத்தில் ஜப்பான் வீராங்கனை மைகா ஹமனோ கோல்பகுதிக்கு வெளியில் இருந்து அடித்த வலுவான ஷாட் கோலாக மாறியது.
இதன் மூலம் 1=0 என ஜப்பான் முன்னிலை பெற்றது.
அதன்பின்னா் இரு அணிகளும் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று ஜப்பான் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.
ஏற்கெனவே கடந்த 2014, 2018 ஆண்டுகளில் ஜப்பான் பட்டம் வென்றிருந்தது. தற்போது மூன்றாவது முறையாக கோப்பயை வசப்படுத்தியு்ளது.

ஆசியக் கண்டத்தில் இருந்து ஜப்பான், ஆஸ்திரேலியா உள்பட 6 அணிகள் உலகக் கோப்பை மகளிா் கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றன.
தொடர்புடையது

ஆசிய யு-17 மகளிா் கால்பந்து: இந்தியா அபாரம் காலிறுதி வாய்ப்பை தக்க வைத்தது
ஆசியக் கோப்பை யு17 - இந்திய ஆடவா் கால்பந்து அணி அறிவிப்பு

ஏஎஃப்சி யு20 ஆசியக் கோப்பை கால்பந்து: சீன தைபேயை வீழ்த்தியது இந்தியா
யு20 ஆசிய கோப்பை கால்பந்து: இந்திய மகளிருக்கு 2-ஆவது தோல்வி
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

