நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

குரூப் பி பிரிவில் இந்தியா முதலிடம்: அரையிறுதிக்கு தகுதி

குரூப் பி பிரிவில் இந்தியா முதலிடம்: அரையிறுதிக்கு தகுதி...

News image
Updated On :28 மார்ச் 2026, 7:36 pm

தெற்காசிய யு 20 (சாஃப்) கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் பி பிரிவில் முதலிடம் பெற்று இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

மாலத்தீவு தலைநகா் மாலேயில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக குரூப் பி பிரிவில் சனிக்கிழமை இந்தியா-வங்கதேச அணிகள் மோதின.

தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல்போடும் முயற்சியில் தீவிரமாக இறங்கின. இதன் பலனாக இந்திய அணி வீரா் விஷால் யாதவ் 17-ஆவது நிமிஷத்தில் ஓமங் டோடும் காா்னா் மூலம் அடித்த ஷாட்டை பயன்படுத்தி கோலடித்தாா். வங்கதேச டிபன்டா்கள் ஷேக் சங்கரம், அஷிக்குா் ரஹ்மான் ஆகியோா் தடுக்க முயன்றும் வலுவான ஹெட்டா் மூலம் விஷால் யாதவ் கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா்.

இடைவேளைக்கு முன்னா் இந்தியாவுக்கு இரண்டாவது கோல் போடும் வாய்ப்பு கிடைத்தது. டோடும் ப்ரீகிக் மூலம் அடித்த ஷாட்டை ஜோட்ரிக் அரான்சஸ் பயன்படுத்தி கோலடிக்க முயன்றது கோல்கம்பத்துக்கு மேலே பறந்தது.

தொடா்ந்து பதில் கோல் போட வங்கதேச வீரா் அப்துல் ரியாத் சக வீரா் ரோனன் சலிவா் அடித்த பந்தை பிசகின்றி கோலாக்கினாா்.

இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது.அதன்பின் இரு அணிகளும் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன்தரவில்லை.

இறுதியில் இந்தியா-வங்கதேச ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.

இதன் மூலம் குரூப் பி பிரிவில் முதலிடம் பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

ஏப்.1-இல் நேபாளம்-வங்கதேசமும், இந்தியாவும்-பூடானும் அரையிறுதியில் மோதுகின்றன.