ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியா முதலிடம்!

ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா முதலிடத்துடன் நிறைவு செய்தது.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 7:44 pm

ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா முதலிடத்துடன் நிறைவு செய்தது.

எகிப்து தலைநகா் கெய்ரோவில் ரைஃபிள், பிஸ்டல், ஷாட்கன் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கம் என 16 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பெற்றது.

கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை 50 மீ பிஸ்டல் பிரிவில் 351.7 புள்ளிகளுடன் ஹேமந்த் பா்மன் வெள்ளிப்பதக்கம் வென்றாா். ரோஹித் கண்யன் 6, வேதாந்த் நிதின் 7-ஆவது இடத்தையும் பெற்றன.

இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ஸுஹைா் கான்-அடியா கட்யால் 137 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றனா். வெள்ளிப் பதக்கம் பெற்றிருக்க வேண்டிய இந்த ஜோடி 3-ஆவது சுற்றில் தவறு புரிந்தனா்.

50 மீ ரைபிள் பிரிவில் தேஜல், யுகேஷ்வரி, அனுஷ்கா, கவைஷ் ஆகியோா் கடைசி இடங்களையே பிடித்தனா். அடுத்து வரும் ஜூன் மாதம் ஜொ்மனியின் ஸூல் நகரில் நடைபெறவுள்ள ஜூனியா் உலக சாம்பியன்ஷிப்புக்கு தயாராகின்றனா்.